கவிதைகள் மீதான காதலில் மயங்கிக் கிடக்கும் கோடானு கோடி எளியவர்களின் ஒருவன் நான். இணையத்தோடு ஓரளவிற்கு பல வருட பரி்ச்சியம் கொண்டவன். என் கவிதைத் துளிகளையும் இணையத்தில் இணைக்க கொண்ட ஆசை இன்று முதல் நிறைவேறப் போகிறது.
ஆர்வம் உள்ள அளவிற்கு சிரத்தை இல்லாமல் போனதால் பல கவிதைகளை நானே இழந்ததுண்டு. இனி என் கவிதைகளை இங்கே தொடரப் போகிறேன். வலையுலகிற்கு என்னை அறிமுகம் செய்வதில் பெருமையும் ஆனந்தமும் கொள்கிறேன்.